விழுதுகளின் துணையோடு
வீழ்ந்து விடாது நிலைத்து நிற்கும்
ஆலமரம் போல் - நீ
விட்டுச்சென்ற பின்பும் வீழ்ந்து விடாது - உன்
நினைவுகளின் துணையோடு மீண்டும்
என் பயணம்
கவிதைகளின் கைப்பிடித்து....!
சலசலவென்று ஓடும் நீரோடையின் உள்ளே சலனமற்று கிடக்கும் கூழாங்கற்களைப்போல் எனக்குள் கிடக்கும் காதலையும் என் இதயம் பேசும் சில வேதனைகளையும் வாசங்களால் சந்தோசத்தையும் வாடிப்போய் சோகத்தையும் பேசும் மலர்போல் கவிதைகளால் இங்கு நான் பேச வந்துள்ளேன்